படகு ஓட்டப்போட்டியில் கலந்து கொள்ள மன்னார் மாணவன் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம்-Photo
மன்னார் எழுத்தூரைச் சேர்ந்த புண்ணியலிங்கம் ஜோய் நிதர்சனன் மொறட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவன் 2014ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 12,13,14ம் திகதிகளில் பிரான்ஸ் நாட்டின் கிரவலிங்ஸ் நகரில் நடைபெறவிருக்கும், உலக பல்கலைகழகங்களுக்கிடையிலான 13வது படகு ஓட்டப் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை பல்கலைக் கழகங்களின் விளையாட்டு சங்கத்தினால், தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் 2011, 2012, 2013, 2014ம் வருடங்களில் இலங்கை பல்கலைக்கழகங்களுக்கிடையிலான படகு ஓட்டப்போட்டிகளில் கலந்து பல பதக்கங்களையும், பரிசுகளையும், பெற்றதுடன், 2013ம் ஆண்டு இலங்கை பல்கலைக்கழகங்களின் சிறந்த வீரருக்கான விருதினையும், பெற்றுள்ளார்.
மேலும் 2012, 2013, 2014 ம் ஆண்டிற்கான ஆண்களுக்காக தனி நபர் போட்டியில் மொறட்டுவ பல்கலைக்கழகம் சார்பில்;பங்குபற்றி வெற்றியீட்டியதுடன் வெற்றிக்கிண்ணத்தினையும், கேடயத்தினையும் பெற்றுள்ளார்.
2013ம் ஆண்டு ரஷ்யா நாட்டில் நடைபெற்ற 27வது உலக பல்கலைக்கழக விளையாட்டுப்போட்டியில் பங்குபற்றியதுடன், 2014ம் ஆண்டு யூன் மாதம நடைபெற்ற தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட 29வது படகு ஓட்ட வெற்றிக்கிண்ண ஆண்களுக்கான போட்டியில் கலந்துகொண்டு 3ம் இடத்தை பெற்று வெண்கலப்பதக்கத்தினையும் வென்றுள்ளார்.
இந்த நிலையில் எதிர்வரும் 12 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரை பிரான்ஸ் நாட்டின் கிரவலிங்ஸ் நகரில் நடைபெறவிருக்கும், உலக பல்கலைகழகங்களுக்கிடையிலான 13வது படகு ஓட்டப் போட்டியில் கலந்து கொள்வதற்காக மன்னார் எழுத்தூரைச் சேர்ந்த புண்ணியலிங்கம் ஜோய் நிதர்சனன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இலங்கையில் இருந்து பிரான்ஸ்சிற்கு பயணமாகியுள்ளார்.
இவர் மன்னார் எழுத்தூர் றோ.க.த.க பாடசாலை, மற்றும் மன்-புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் (தேசிய பாடசாலை) பழைய மாணவனுமாவார்.
படகு ஓட்டப்போட்டியில் கலந்து கொள்ள மன்னார் மாணவன் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம்-Photo
Reviewed by NEWMANNAR
on
September 08, 2014
Rating:
No comments:
Post a Comment