அண்மைய செய்திகள்

recent
-

வடக்கில் 23 பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்கள்


வட­ப­கு­தியில் இவ்­வ­ருட முதல் காலாண்­டிற்குள் 23 பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்கள் இடம்­பெற்­றுள்­ளன. மேலும், 38 சிறு­வர்கள் பெற்­றோரால் புறக்­க­ணிக்கப்­பட்ட நிலையில் இருப்­ப­தாக உத்­தி­ யோ­க­பூர்வ தக­வல்கள் கூறு­கின்­றன. இதே­வேளை, உத்­தி­யோ­க­பூர்வ பதி­வு கள், முறை­யீ­டு­க­ளுக்கு உள்­ள­டங்­கா­மலும், மறைக்­கப்­பட்ட நிலை­யிலும் கணி­ச­மா­ன­ளவு பாலியல் வல்­லு­றவுக் கொடு­மைகள் அரங்­கே­றி­யி­ருப்­ப­தாக சமூக ஆர்­வ­லர்கள் தெரி­விக்­கின்­றனர். வட மாகா­ணத்­தி­லுள்ள ஐந்து மாவட்­டங்­க­ளிலும் பதிவு செய்­யப்­பட்ட பாலியல் கொடு­மை­களில் யாழ். மாவட்டம் முன்­ன­ணியில் உள்­ளது. யாழ். மாவட்­டத்தில் 10 சம்­ப­வங்­களும், முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் 5 சம்­ப­வங்­களும், கிளி­நொச்சி மாவட்­டத்தில் 5 சம்­ப­வங்­களும், மன்னார் மாவட்­டத்தில் 2 சம்­ப­வங்­களும், வவு­னியா மாவட்­டத்தில் 2 சம்­ப­வங்­களும் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. குறித்த காலாண்டு பகு­தியில் பெற்­றோரால் புறக்­க­ணிக்­கப்­பட்ட சிறார்கள் என்ற வகையில் கிளி­நொச்சி மாவட்­டத்தில் 18 முறைப்­பா­டு­களும், முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் 11 முறைப்பாடுகளும், வவுனியா மாவட்டத்தில் 6 முறைப்பாடுகளும், யாழ். மாவட்டத்தில் 3 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வடக்கில் 23 பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்கள் Reviewed by Author on June 07, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.