அண்மைய செய்திகள்

recent
-

உளநலம் பாதிக்கப்படுவோரின் தொகை கிளிநொச்சியில் அதிகரிப்பு


கிளிநொச்சி மாவட்டம் உட்பட வன்னிப்பகுதிகளில் கடந்த யுத்தத்தின் பின்னர் உளநலம் பாதிக்கப்பட்டோரின் தொகை வெகுவாக அதிகரித்து காணப்படுகின்றது. இவ்வாறு உளநோய்க்காளோரில் பலர் தற்கொலை செய்து கொள்வதை காணமுடிகின்றது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் உள்ள மலையாளபுரம் கிராம சேவையாளர் பிரிவில் மட்டும் கடந்த சில மாதங்களுக்குள் ஐந்து பேர்வரை உளநலம் பாதிப்பால் தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் பரந்தனில் உள்ள கிளிநொச்சி மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை ஆகியவற்றில் உளவள சிகிச்சைப்பிரிவுகள் இயங்கி வருகின்றன. இங்கு சிகிச்சை பெறவரும் மனநோயாளர்களின் தொகையும் அதிகரித்து காணப்படுகிறது.
உளநலம் பாதிக்கப்படுவோரின் தொகை கிளிநொச்சியில் அதிகரிப்பு Reviewed by Author on June 07, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.