மதுபான விற்பனை நிலையங்களின் உரிமத்தை ரத்து செய்யவும்: மதுவரி ஆணையாளர்
மதுவரி உரிமத்திற்கு மாறாக செயற்படும் மதுபான விற்பனை நிலையங்களை சோதித்து உரிமத்தை ரத்துச் செய்யுமாறு மதுவரி ஆணையாளர் யாழ்.மதுவரி ஆணையாளருக்கு உத்தரவு வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வடமாகாணசபையில் கடந்த 9ம் திகதி நடைபெற்ற மாகாணசபையி ன் 30 வது அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைய மதுவரி திணைக்களம் யாழ்.குடாநாட்டில் உள்ள மதுவரி உரிமத்திற்கு மாறாக செயற்படும் மதுபான விற்பனை நிலையங்களை சோதித்து உரிமத்தை ரத்துச் செய்யுமாறு மதுவரி ஆணையாளர் யாழ்.மதுவரி ஆணையாளருக்கு உத்தரவு வழங்கியுள்ளார்.
கடந்த 9ம் திகதி நடைபெற்ற வடமாகாணசபையின் 30 வது அமர்வில் யாழ்.குடாநாட்டில் மதுபான விற்பனை நிலையங்கள் உரிமங்களுக்கு மாறாக செயற்படுவதாகவும், விற்பனை செய்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டதுடன் குறித்த தீர்மானம் மதுவரி ஆணையாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வேண்டுகோளுக்கிணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.மதுவரி ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை குறித்த சோதனை நடவடிக்கை அடுத்த வாரம் இடம்பெறும் எனவும் முறையற்ற மதுபான விற்பனை நிலையங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரி திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளதுடன் புதிய மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதிகள் வழங்கப்படாது எனவும் தெரிவித்துள்ளனர்.
மதுபான விற்பனை நிலையங்களின் உரிமத்தை ரத்து செய்யவும்: மதுவரி ஆணையாளர்
Reviewed by NEWMANNAR
on
June 28, 2015
Rating:
No comments:
Post a Comment