அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் பஸ் சில்லில் தலை நசுங்கி குடும்பஸ்தர் பலி.-Photos



தனியார் பேரூந்து ஒன்றின் பின் சில்லில் தலை நசுங்கி குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் இன்று (15) புதன் கிழமை மாலை 6.45 மணியளவில் மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் இடம் பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் மன்னார் சாவட்கட்டு கிராமத்தைச் சேர்ந்தவரும், மன்னார் நகர சபையின் சுற்றிகரிப்பு பணியாளராக கடமையாற்றும் குடும்பஸ்தரான பஞ்சநாதன் (வயது-49) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மது போதையில் காணப்பட்டதாகவும்,தனியார் பஸ் தரிப்பிட பகுதிக்கு வந்த போது பேரூந்தின் பின் புறமான தள்ளாடிக்கொண்டிருந்த நிலையில் கீழே விழுந்ததாகவும் இதன் போதே அவரின் தலை மீது பஸ் ஏறியதாகவும் சம்பவ இடத்தில் நிண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் போது குறித்த குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உடனடியாக சம்பவ இட்திற்கு வந்த மன்னார் பொலிஸார் குறித்த தனியார் பேரூந்தின் சாரதியை கைது செய்துள்ளதோடு குறித்த சடலத்தை மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

இதன் போது சம்பவ இடத்திற்கு வந்த உயிரிழந்தவரின் கிராமத்தை சேர்ந்த மக்கள் தனியார் பேரூந்து நிலையத்தில் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் சென்றனர்.







மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் பஸ் சில்லில் தலை நசுங்கி குடும்பஸ்தர் பலி.-Photos Reviewed by NEWMANNAR on July 15, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.