முதலமைச்சர் விருது பெற்ற மன்னார் கலைஞர்கள்---2015
முதலமைச்சர் விருது பெற்ற மன்னார் கலைஞர்கள்-2015
வருடாவருடம் நடைபெறும் வடக்குமாகாண இலக்கியப்பெருவிழா-2015 இம்முறையும் கூட்டுறவு மண்டபம் கிளிநொச்சியில் 23-24-10-2015 இரண்டு நாள் நிகழ்வாக மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு நிகழ்வுகளாக 2014 ஆண்டு வெளியான நூல்களில் சிறந்த நூலுக்கான வடக்குமாகாண சிறந்த நூல்பரிசு வழங்கப்பட்டதோடு 2015ஆண்டிற்கான முதலமைச்சர் விருதானது கலைச்சேவை செய்த கலைஞர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்…
இவ்முதலமைச்சர் விருதினை எமது மன்னார் மாவட்டத்தைச்சேர்ந்த மூன்று கலைஞர்கள் பெற்றுக்கொண்டனர்
கலாபூஷணம் திரு.அம்பலவாணர் செல்லத்துரை (கூத்து-நாடகம்)
50 வருட கலைச்சேவை தட்சணாமருதமடு- மடு பிரதேசம்…
திரு.செல்லன் மாதவன் (நாடகம்)
50வருட கலைச்சேவை கல்மடு -மடு பிரதேசம்…
திரு.மீராசாய்வு அப்துல்றபீக் (இலக்கியம்)
45 வருட கலைச்சேவை சிலாவத்துறை- முசலி பிரதேசம்…
மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இம்மூன்று கலைஞர்களையும் நியூ மன்னார் இணையமும் வாழ்த்தி நிற்கின்றது.
முதலமைச்சர் விருது பெற்ற மன்னார் கலைஞர்கள்---2015
Reviewed by Author
on
November 03, 2015
Rating:
No comments:
Post a Comment