மன்னாரில் இடம் பெற்ற காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளின் போது 171 பேர் சாட்சியமளிப்பு(
காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவினுடைய விசாரணைகள் இன்று (28)திங்கட்கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் இடம் பெற்ற போது 171 பேர் கலந்து கொண்டு சாட்சியமளித்துள்ளனர்.
ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் மூன்று ஆணையாளர்கள் உள்ளடங்களாக குறித்த விசாரணைகள் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் அண்மையில் இடம் பெற்ற காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவினுடைய விசாரணைகள் போது கலந்து கொண்டு சாட்சியம் வழங்காதவர்களுக்கே சாட்சியமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 257 பேரூக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் இன்று திங்கட்கிழமை மாலை 5.30 மணிவரை 171 பேர் மாத்திரமே சாட்சியமளித்துள்ளனர். மேலும் புதிதாக 41 பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் அவர்களின் பங்குபற்றுதலுடன் இடம் பெற்ற காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவினுடைய விசாரணைகளின் போது கலந்து கொண்ட பலர் காணாமல் போனவர்கள்,கடத்தப்பட்டவர்கள்,இராணுவத்திடம் தமது உறவுகளை ஒப்படைத்தவர்கள் என தமது உறவுகள்,பிள்ளைகள்,கணவன் ஆகியோரை இழந்து தவிக்கும் உறவுகளே இவ்வாறு கலந்து கொண்டு சாட்சியமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
-28-03-2016
ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் மூன்று ஆணையாளர்கள் உள்ளடங்களாக குறித்த விசாரணைகள் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் அண்மையில் இடம் பெற்ற காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவினுடைய விசாரணைகள் போது கலந்து கொண்டு சாட்சியம் வழங்காதவர்களுக்கே சாட்சியமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 257 பேரூக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் இன்று திங்கட்கிழமை மாலை 5.30 மணிவரை 171 பேர் மாத்திரமே சாட்சியமளித்துள்ளனர். மேலும் புதிதாக 41 பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் அவர்களின் பங்குபற்றுதலுடன் இடம் பெற்ற காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவினுடைய விசாரணைகளின் போது கலந்து கொண்ட பலர் காணாமல் போனவர்கள்,கடத்தப்பட்டவர்கள்,இராணுவத்திடம் தமது உறவுகளை ஒப்படைத்தவர்கள் என தமது உறவுகள்,பிள்ளைகள்,கணவன் ஆகியோரை இழந்து தவிக்கும் உறவுகளே இவ்வாறு கலந்து கொண்டு சாட்சியமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
-28-03-2016
மன்னாரில் இடம் பெற்ற காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளின் போது 171 பேர் சாட்சியமளிப்பு(
Reviewed by NEWMANNAR
on
March 29, 2016
Rating:
No comments:
Post a Comment