அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கொடி வார நிகழ்வு ஆரம்பம்.(படம்)

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வருடாந்தம் அனுஸ்ரிக்கப்படும் 'கொடி வாரம்' இன்று புதன் கிழமை(25) மன்னாரில் ஆராம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

-மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ரி.பூலோகராஜா தலைமையில் இடம் பெற்ற ஆராம்ப நிகழ்வின் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய அவர்களுக்கு வைபவ ரீதியாக முதற் கொடி குற்றப்பட்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கொடி வார நிகழ்வு மன்னாரில் வைபவ ரீதியாக ஆராம்பித்து வைக்கப்பட்டது.

-அதனைத்தொடர்நது மன்னார் மாவட்ட மேலதிக அரசாஙடக அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் கொடி குற்றப்பட்டது.குறித்த நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர்,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட சம்மேலனத்தலைவர் சி.விஜயகுமார் உற்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


-மன்னார் நிருபர்-
(25-05-2016)






மன்னாரில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கொடி வார நிகழ்வு ஆரம்பம்.(படம்) Reviewed by NEWMANNAR on May 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.