இறந்து போன கணவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்: பிரான்ஸ் நீதிமன்றம் அனுமதி....
இறந்து போன கணவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதில் தவறில்லை என்று பிரான்சின் தலைமை நிர்வாக நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஸ்பெயினை சேர்ந்த Mariana Gomez-Turri என்ற பெண்ணின் கணவர் கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
இந்நிலையில் தனது கணவரின் ஆண்மையை எடுத்து வைத்திருந்த Mariana, அதன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அவர் விரும்பினார்.
இவர்கள் இருவரும் பாரிசில் வாழ்ந்த வந்த போது பிரான்சின் சட்டம் தொடர்பாக வழக்கு தொடுத்திருந்தனர்.
பிரான்சில் செயற்கை கருவூட்டல் என்பது மலட்டு ஜோடிகளுக்கு மட்டுமே நடைமுறையில் அதிகம் உள்ளது. இதனால் இவரின் விருப்பத்திற்கு எதிர்ப்பு வலுத்தது.
இந்நிலையில் Mariana சட்டங்கள் ஒருவரின் உரிமைகளை பறிக்க கூடாது என்று கூறி Mariana மேல்முறையீடு செய்தார்.
இதனை ஒரு சிறப்பு வழக்காக எடுத்து விசாரணை நடத்திய நீதிபதிகள் இறந்து போன கணவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அவருக்கு அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளனர்.
இறந்து போன கணவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்: பிரான்ஸ் நீதிமன்றம் அனுமதி....
Reviewed by Author
on
June 01, 2016
Rating:
No comments:
Post a Comment