அண்மைய செய்திகள்

recent
-

பருத்தித்துறையில் ஆட்டோவுடன் மோதி கிணற்றுக்குள் பாய்ந்தது ஹயஸ்

பருத்தித்துறையிலிருந்து சாவகச்சேரி செல்லும் வீதியில் யாக்கரு சந்தியில் நேற்று மாலை 5மணிக்கு பின்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார் .

நாற்சந்தியில் திடீரென வந்த ஆட்டோவில் எதிரே வந்த ஹயஸ் வான் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது .இந்த சம்பவத்தில் ஆட்டோ சாரதி படுகாயங்களுக்கு உள்ளானதோடு மோதிய வான் அருகிலிருந்த கிணற்றினுள் பாய்ந்துள்ளது.

இந்த விபத்தில் ஹயஸ் வாகனத்தில் வந்தவர் வாகனத்தை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டதாகவும் ஆட்டோவில் வந்தவர்கள் படுகாயங்களுக்கு உள்ளாகி மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
பருத்தித்துறையில் ஆட்டோவுடன் மோதி கிணற்றுக்குள் பாய்ந்தது ஹயஸ் Reviewed by NEWMANNAR on August 10, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.