அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் முதல் தடவையாக சாமசிறி விருதுகள் வழங்கும் ------முழுமையான 101படங்கள் இணைப்பு



சமூகசேவைகள் செய்த செய்துகொண்டு இருக்கின்ற கலைஞர்களுக்கு அவர்களின் சேவையை பாராட்டிவருடாவருடம் வழங்கப்படுகின்ற விருதானது அகில இனநல்லினக்க ஒன்றியத்தினரால் இவ்வருடம் மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட 60 கலைஞர்களுக்கு தேசகீர்த்தி-தேசாபிமானி-தேசசக்தி-தேசபந்து எனும் 04 பிரிவுகளில் வழங்கப்பட்டது.


 இன்று13-08-2016  மன்னார் நகர மண்டபத்தில் அகில இனநல்லினக்க ஒன்றியத்தின் மன்னார் மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் அலாம் M. நளர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற சமூக சேவையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொண்டு சிறப்பித்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் K.K.மஸ்தான், வடமாகாண சபை அமைச்சர் கௌரவ B.டெனீஸ்வரன் L L.B, வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ. S.சிராய்வா L L B மற்றும் மன்னார் நகராட்சி மன்ற செயலாளர் கௌரவ. X.L.ரெனால்ட்
 ஆகியோருடன் பாடசலைஅதிபர்கள் ஆசிரியர்கள் அரச அதிகாரிகள் சமயத்தலைவர்கள் அமைப்புக்களின்  பிரதிநிதிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் அதிதிகளின் உரையின் சாரம்சமாக இலங்கையில் 25 மாவட்டங்களில் மன்னாரில் தான் இனங்களுக்கிடையிலும் மதங்களுக்குகிடையிலும் ஒற்றுமை காணப்படுகின்றது அதை சீர்குலைக்கும் வகையில் சில மாதங்களாக முரண்பாட்டு நிலை காணப்படுகின்றது அதை நாம் இல்லாமல் செய்யவேண்டும் அதற்கு இவ்வறான நிகழ்வுகள் பாலமாக அமையும் விருதுகள் பெற்றவர்கள் இன்னும் சமூகசேவையில் ஈடுபடவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.




































































































நீயூமன்னார் இணையத்திற்காக-வை-கஜேந்திரன்-
மன்னார் மாவட்டத்தில் முதல் தடவையாக சாமசிறி விருதுகள் வழங்கும் ------முழுமையான 101படங்கள் இணைப்பு Reviewed by Author on August 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.