அண்மைய செய்திகள்

recent
-

தப்பிச் சென்ற சிறு நீரக மோசடியாளர்களான இந்தியர்களில் 5 பேர் தலை மன்னாரில் வைத்து கைது.

சிறுநீரக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு மிரிஹான தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த 7 இந்தியர்கள் தப்பிச் சென்ற நிலையில் குறித்த 7 இந்தியர்களில் 5 பேர் நேற்று வியாழக்கிழமை இரவு தலைமன்னார் பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

சிறுநீரக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு மிரிஹான தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த 7 இந்தியர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (8) தப்பிச் சென்றுள்ளனர்.

தப்பிச் சென்ற குறித்த 7 இந்தியர்கள் தொடர்பாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினரும் மிரிஹான பொலிஸாரும் இணைந்து விசாரனைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் குறித்த இந்தியர்கள் 7 பேரூம் தப்பிச் சென்ற விடையம் தொடர்பில் தெளிவு படுத்துவதற்காக எதிர்வரும் 24 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு மிரிஹான தலைமை பொலிஸ் பரிசோதகருக்கு நீதவான் அறிவித்தல் அனுப்பியுள்ளார்.

மேலும்; தப்பிச் சென்றுள்ள 7 இந்தியப் பிரஜைகளையும் கைது செய்யும் வகையில் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலே குறித்த 7 இந்தியர்களில் 5 பேர் தலைமன்னார் கடல் வழியாக இந்தியாவிற்கு தப்பிச் செல்வதற்காக மன்னாருக்கு வந்து தலைமன்னார் சென்ற போது நேற்று வியாழக்கிழமை இரவு தலைமன்னார் பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

தற்போது கைது செய்யப்பட்ட 5 இந்தியர்களில் 4 பேர் பேசாலை பொலிஸ் நிலையத்திலும் ஒருவர் தலைமன்னார் பொலிஸ் நிலையத்திலும் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது.ஏனைய இருவர் தொடர்பிலும் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என்பது என்பது குறிப்பிடத்தக்கது.
தப்பிச் சென்ற சிறு நீரக மோசடியாளர்களான இந்தியர்களில் 5 பேர் தலை மன்னாரில் வைத்து கைது. Reviewed by NEWMANNAR on November 11, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.