வங்காலை புனித ஆனாள் மத்திய ம.வி பாடசாலையின் மாணவத்தலைவர்களுக்கு சின்னம் சூட்டி வைப்பு.-Photos
மன்னார் வங்காலை புனித ஆனாள் மத்திய ம.வி பாடசாலையின் 2016 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவத்தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை(10) காலை பாடசாலை அதிபர் அருட்சகோதரர் எஸ்.சந்தியோகு தலைமையில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா கலந்து கொண்டார்.
இதன் போது 2016 ஆம் 2017 ஆம் ஆண்டுகளுக்கான மாணவத்தலைவர்களாக தெரிவு செய்யப்பட்ட 26 மாணவர்களுக்கு சின்னம் சூட்டப்பட்டது.
இதன் போது பாடசாலை அதிபர் அருட்சகோதரர் எஸ்.சந்தியோகு, வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,பிரதி அதிபர்,ஆசிரியர்கள் ஆகியோர் இணைந்து மாணவர்களுக்கு சின்னம் சூட்டி கௌரவித்தனர்.
குறித்த நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர் என பலரும் கடலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் படசாலையின் நலனை கருத்தில் கொண்டு வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா தனது ஒதுக்கீட்டில் இருந்து கொள்வனவு செய்ய 13 அலுமாரிகளை பாடசாலை அதிபர் அருட்சகோதரர் எஸ்.சந்தியோகு அவர்களிடம் வைபவ ரீதியாக கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
வங்காலை புனித ஆனாள் மத்திய ம.வி பாடசாலையின் மாணவத்தலைவர்களுக்கு சின்னம் சூட்டி வைப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
November 10, 2016
Rating:
No comments:
Post a Comment