மன்னார் மறைமாவட்டம் ஏற்படுத்தப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவு விழா.
மன்னார் மறைமாவட்டம் ஏற்படுத்தப்பட்டதை நினைவு கூரும் ஆண்டு விழாக்கள் வருடாந்தம் மன்னார், தோட்டவெளி வேதசாட்சிகள் அன்னை ஆலயத்தில் சிறப்பாக இடம் பெற்று வருகின்றன.
இதனடிப்படையில் மன்னார் மறைமாவட்டம் ஏற்படுத்தப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவு விழா எதிர்வரும் 28ஆம் திகதி (28.01.2017) சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு தோட்டவெளி வேதசாட்சிகள் அன்னை ஆலயத்தில் இடம் பெறும்.
மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு கிங்கிஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை இந்த விழாத்திருப்பலியை தலைமை தாங்கி ஒப்புக்கொடுப்பார்.
இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்டத்தின் பல்வேறு பங்குகளில் இருந்தும் இறைமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக மன்னார் மறைமாவட்டத்தின் ஊடக இணைப்பாளரும் கலையருவி அமைப்பின் இயக்குனருமான அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தெரிவித்தார்.
போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும், விளையாட்டு வினோதப் பொருட்களுக்கான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
-மன்னார் நிருபர்-
(26-1-2017)
இதனடிப்படையில் மன்னார் மறைமாவட்டம் ஏற்படுத்தப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவு விழா எதிர்வரும் 28ஆம் திகதி (28.01.2017) சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு தோட்டவெளி வேதசாட்சிகள் அன்னை ஆலயத்தில் இடம் பெறும்.
மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு கிங்கிஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை இந்த விழாத்திருப்பலியை தலைமை தாங்கி ஒப்புக்கொடுப்பார்.
இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்டத்தின் பல்வேறு பங்குகளில் இருந்தும் இறைமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக மன்னார் மறைமாவட்டத்தின் ஊடக இணைப்பாளரும் கலையருவி அமைப்பின் இயக்குனருமான அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தெரிவித்தார்.
போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும், விளையாட்டு வினோதப் பொருட்களுக்கான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
-மன்னார் நிருபர்-
(26-1-2017)
மன்னார் மறைமாவட்டம் ஏற்படுத்தப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவு விழா.
Reviewed by NEWMANNAR
on
January 26, 2017
Rating:
No comments:
Post a Comment