அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மீனவர்களின் பிரச்சினை குறித்து அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் மீனவ சங்க பிரதி நிதிகள் சந்திப்பு

மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்ச்சியாக எதிர் நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர வை மாளிகாவத்தையிலுள்ள அவரது அமைச்சு அலுவலகத்தில் மன்னார் மாவட்டத்தைச் சார்ந்த பிரதிநிதிகள் சிலர் நேற்று புதன் கிழமை சந்தித்து உரையாடியுள்ளனர்.

குறித்த சந்திப்பின் போது அமைச்சர் ரிஸாட் பதியுதீன் கலந்து கொண்டு மன்னார் மாவட்ட மீனவர்கள் தற்போது எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்து தெழிவுபடுத்தினார்.

-குறித்த சந்திப்பின் போது மன்னார் வங்காலை பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயபாலன் அடிகளார் மற்றும் மன்னார் மாவட்ட மீனவ சங்கங்களின் சில பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



-மன்னார் நிருபர்-
(19-1-2017)



மன்னார் மீனவர்களின் பிரச்சினை குறித்து அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் மீனவ சங்க பிரதி நிதிகள் சந்திப்பு Reviewed by NEWMANNAR on January 19, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.