மன்னாரில் இரவில் நேரத்தில் சுழியோடி 'கடலட்டை' பிடிப்பதற்கு கடற்படையினர் அனுமதி மறுப்பு - மீனவர்களின் பாதிப்பு.
மன்னார் மாவட்டத்தில் தென் ககடலில் இரவு நேரங்களில் சுழியோடி 'கடலட்டை' பிடிப்பதற்கு மன்னார் கடற்தொழில் திணைக்களத்திடம் அனுமதி வழங்கியுள்ள போதும் கடற்படையினர் தொடர்ந்தும் அனுமதி மறுத்து வருவதாக கடலட்டை பிடிக்கும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இரவு நேரத்தில் சுழியோடி கடலட்டை பிடிப்பதற்கு கடற்தொழில் திணைக்களத்தினூடாக அனுமதி பத்திரம் பெற்றுள்ள போதும் தாற்போது இரவு நேரத்தில் கடலட்டை பிடிப்பதற்கு கடற்படையினர் தொடர்ந்தும் அனுமதி மறுத்து வருவதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் தென்கடல் பகுதியில் நீண்ட காலமாக இரவு நேரங்களில் மீனவர்கள் சுழியோடி கடலட்டை பிடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
-கடற்தொழில் திணைக்களத்தின் அனுமதிப்பத்திரம் பெற்று குறித்த தொழிலில் ஈடுபட்டு வரகின்றனர்.
குறித்த கடலட்டை பிடிக்கும் தொழிலானது ஒக்டோபர் முதல் ஏப்பிரல் மாதம் வரையிலான 7 மாதங்கள் மாத்திரமே மன்னார் தென் கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
-ஏனைய காலங்களில் செய்ய முடியாத நிலை ஏற்படும்.
இந்த நிலையில் தற்போது இரவு நேரத்தில் கடலுக்குச் சென்று சுழியோடி கடலட்டை பிடிக்கும் மீனவர்களை இரவு நேரத்தில் செல்ல அனுமதிக்காது பகல் நேரத்தில் குறித்த தொழிலை செய்ய கடற்படையினர் அனுமதிப்பதாக மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
-மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களம் அனுமதியை வழங்கியுள்ள போதும் கடற்படையினரே அனுமதி மறுத்து வருவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் சிலின்டர் பயண்படுத்தியும்,சிலின்டர் பயண்படுத்தாதும் குறித்த தொழிலை செய்து வருகின்றனர்.
-மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களம் பகல்,இரவு நேரங்களில் குறித்த தொழிலை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ள போதும்,குறித்த தொழிலில் ஆதிக்கம் செலுத்தியுள்ள கடற்படை பகலில் மாத்திரமே குறித்த தொழிலை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளனர்.
இதனால் குறித்த தொழிலை மேற்கொள்ளும் மீனவர்களின் குடும்பங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருவதாக பாதீக்கப்பட்ட மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
-மன்னார் நிருபர்-
(7-1-2017)
இரவு நேரத்தில் சுழியோடி கடலட்டை பிடிப்பதற்கு கடற்தொழில் திணைக்களத்தினூடாக அனுமதி பத்திரம் பெற்றுள்ள போதும் தாற்போது இரவு நேரத்தில் கடலட்டை பிடிப்பதற்கு கடற்படையினர் தொடர்ந்தும் அனுமதி மறுத்து வருவதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் தென்கடல் பகுதியில் நீண்ட காலமாக இரவு நேரங்களில் மீனவர்கள் சுழியோடி கடலட்டை பிடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
-கடற்தொழில் திணைக்களத்தின் அனுமதிப்பத்திரம் பெற்று குறித்த தொழிலில் ஈடுபட்டு வரகின்றனர்.
குறித்த கடலட்டை பிடிக்கும் தொழிலானது ஒக்டோபர் முதல் ஏப்பிரல் மாதம் வரையிலான 7 மாதங்கள் மாத்திரமே மன்னார் தென் கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
-ஏனைய காலங்களில் செய்ய முடியாத நிலை ஏற்படும்.
இந்த நிலையில் தற்போது இரவு நேரத்தில் கடலுக்குச் சென்று சுழியோடி கடலட்டை பிடிக்கும் மீனவர்களை இரவு நேரத்தில் செல்ல அனுமதிக்காது பகல் நேரத்தில் குறித்த தொழிலை செய்ய கடற்படையினர் அனுமதிப்பதாக மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
-மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களம் அனுமதியை வழங்கியுள்ள போதும் கடற்படையினரே அனுமதி மறுத்து வருவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் சிலின்டர் பயண்படுத்தியும்,சிலின்டர் பயண்படுத்தாதும் குறித்த தொழிலை செய்து வருகின்றனர்.
-மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களம் பகல்,இரவு நேரங்களில் குறித்த தொழிலை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ள போதும்,குறித்த தொழிலில் ஆதிக்கம் செலுத்தியுள்ள கடற்படை பகலில் மாத்திரமே குறித்த தொழிலை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளனர்.
இதனால் குறித்த தொழிலை மேற்கொள்ளும் மீனவர்களின் குடும்பங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருவதாக பாதீக்கப்பட்ட மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
-மன்னார் நிருபர்-
(7-1-2017)
மன்னாரில் இரவில் நேரத்தில் சுழியோடி 'கடலட்டை' பிடிப்பதற்கு கடற்படையினர் அனுமதி மறுப்பு - மீனவர்களின் பாதிப்பு.
Reviewed by NEWMANNAR
on
January 07, 2017
Rating:
No comments:
Post a Comment