அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தின் நறுவிலிக்குளக்கிராமத்தில்.....

சர்வதேச அளவிளான மைதானத்திற்கான  அடிக்கல் நட்டு விழா இன்று 27-01-2017  மாலை 3-00மணியளவில் இடம்பெற்றது.


இந்நிகழ்விற்கு
கிராமத்தில் உள்ள திறமையான விளையாட்டு வீரவீராங்கனைகள் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில்  வெற்றிகளை ஈட்டிக்கொள்வதற்கான  வாய்ப்புக்களை வழங்கு வதற்கான  மாவட்ட மட்டத்தில் விளையாட்டு உட்கட்டமைப்புக்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் கிராமத்தை சென்றடையும் விளையாட்டுக்கலாச்சாரத்தை ஏற்படுத்தும் வகையில்
அதிமேதகு ஜனாதிபதி அவர்களினதும் கௌரவ பிரதமமந்திரி அவர்களினதும் ஆசீர்வாத்துடன் கௌரவ விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர அவர்களினது வழிகாட்டலில் மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள நறுவிலிக்குளக்கிராமத்தில்

கௌரவ ரிஷட்பதியூதீன்
கௌரவ கே.கே.மஸ்தான்
கௌரவ சார்ள்ஸ் நிர்மலநாதன்
கௌரவ செல்வம் அடைக்கல நதன்
கௌரவ த.குருகுலராஜா  இவர்களுடன் அருட்தந்தையர்கள் வட மாகாண அமைச்சர்கள்  உறுப்பினர்கள் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்கள் அரச பணிப்பாளர்கள் திணைக்கள அதிகாரிகள்  மன்னார் மாவட்ட  அபிவிருத்திக்குழுவின்  அதிகாரிகள் விளையாட்டு உத்தியோகத்தர்கள்  வீரவீராங்கனைகள் பங்குபற்றுதலுடன் கௌரவ விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களினால் மன்னார் மவட்ட விளையாட்டு தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுடன் சிறப்பாக இடம் பெற்றது.






































மன்னார் மாவட்டத்தின் நறுவிலிக்குளக்கிராமத்தில்..... Reviewed by Author on January 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.