23 ஆண்டுகள் கழித்து பழைய விந்தணுக்கள் மூலம் கருத்தரித்த பெண்
தற்போதைய காலத்தில் மருத்துவதுறையில் உயர்ந்து வருகின்ற தொழில்நுட்ப வளர்ச்சிகள் அனைத்துமே நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
அந்த வகையில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன் சேமித்து வைத்த பழைய விந்தணுக்களைப் பயன்படுத்தி, ஒரு பெண்ணை கருத்தரிக்க வைத்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளார்கள்.
அலெக்ஸ் போவெல் என்ற ஆண்ணுக்கு 15 வயது இருக்கும் போது ஹாட்ஜ்கின்ஸ் லிம்போமா (Hodgkin's Lymphoma) நோய்க்கான சிகிச்சை செய்ததால், கீமோதெரபி எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் அலெக்ஸின் 15 வயதில் அவருடைய விந்தணுக்களை சேமிப்பு வங்கியில் கொடுத்து வைக்கப்பட்டு இருந்தது.
பின் 23 ஆண்டுகள் கழித்து, அலெக்ஸின் திருமணத்திற்கு பின் அவருடைய மனைவிக்கு அந்த பழைய விந்தணுக்களை IVF முறைப்படி பயன்படுத்தி கருத்தரிக்க செய்து மருத்துவர்கள் சாதனை செய்துள்ளார்கள்.
23 ஆண்டுகள் கழித்து பழைய விந்தணுக்கள் மூலம் கருத்தரித்த பெண்
Reviewed by Author
on
February 10, 2017
Rating:
No comments:
Post a Comment