அண்மைய செய்திகள்

recent
-

நெருப்பினால் கருகாத அதிசய அபூர்வ மரம் பற்றி உங்களுக்கு தெரியுமா.....


காட்டுத் தீ பரவும் போது செடி, கொடி, மரங்கள் என சுற்றியிருக் கும் எதனையும் விட்டு வைப்பதில்லை என்று கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், நெருப்பினைத் தன்னருகில் வரவிடாமல் தடுத்து நிறுத்தும் தன்மை அமையப் பெற்ற மரங்கள் இந்தியாவின் இமயமலைத் தொடர்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் காணப்படுகின்றன.

ரொடோடென்ரன் (rhododendron) என்ற-ழைக்கப்படும் இந்த மரத் தின் அருகில் நெருப்பு சென்றால், பல அடுக்குகளாக அமைந்துள்ள இதன் பட்டைகளிலிருந்து நீர் வடியத் தொ டங்கி-விடும். இதனால் இம்மரத்தி ற்கு நெருப்பினால் அழிவு ஏற்படாது.

பரந்த புல்வெளியில் செந்நிறப் பூக்களுடன் காட்சிதரும் இம்மரங்க ள் பறவைகளைக் கவர்ந்திழுத்து, பெரும்பாலான பறவைகளின் வா சஸ்தலமாக விளக்குகின்றன. பல த்த காற்றினையும் தாங்கக் கூடிய உறுதி படைத்தனவாகவும் திகழ்கி ன்றன. இம்மரத்தில் காணப்படும் செந்நிற மலர்களிலிருந்து தயாரிக் கப்படும் சாறு மருத்துவத் தன்மை கொண்டது.

தமிழில் காட்டுப் பூவரசு எனவும் நீல கிரியில் படுகர் மொழியில் பில்லி எனவும் அழைக்கப்படுகிறது.

இம் மலர்கள் போரஸ் என்று பூர்வீகக் குடிக ளான தோடர் இனத்தவரால் அழைக்கப்-படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகு திகளில் (நீலகிரி, ஆனைமலை, பழனி, மேக மலை) கடல்மட்டத்தி ற்குமேலே 1500 மீட்ட ர் உயரத்திற்கும் அதிக மான பகுதிகளில் இம் மரங்கள் வளர்ந்துள்ளன. நீலகிரியின் பூர்வீக மரங்கள் என்றும் இதனை அழைக்கலாம்.

இந்தியாவைத் தவிர இலங்கை, நேபாளம், மியான்மர், சீனா, தாய் லாந்து ஆகிய நாடுகளி லும் ரொடோ டென்ரன் மரங்கள் காணப்படுகின்றன.


நெருப்பினால் கருகாத அதிசய அபூர்வ மரம் பற்றி உங்களுக்கு தெரியுமா..... Reviewed by Author on February 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.