அண்மைய செய்திகள்

recent
-

மாணவர்கள் கொலை; சந்தேக நபர்களின் மறியல் நீடிப்பு


யாழ்ப்பாணம்-கொக்குவில் கே.கே.எஸ்.வீதி பகுதியில்  பல்கலைகழக மாணவர்கள் இருவரை பொலிஸார் சுட்டுக்கொலை செய்த வழக்கு விசாரணையில் கைதாகியுள்ள சந்தேக நபர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழகத்தினை சேர்ந்த இரு மாணவர்கள் மீது கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அண்மையில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்திருந்தனர்.

இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணையானது யாழ். நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையிலேயே நேற்றைய தினமும் குறித்த வழக்கு விசாரணையானது யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டிருந்த போது, குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸார் விசா ரணை தொடர்பான மேலதிக அறிக்கையை தாக்கல் செய்திருந்தனர்.

இதனை தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்திவைத்ததுடன் அதுவரை குறித்த ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும் விளக்கமறியலில் வைக்க  நீதவான் எஸ்.சதீஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.                

மாணவர்கள் கொலை; சந்தேக நபர்களின் மறியல் நீடிப்பு Reviewed by Author on February 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.