அண்மைய செய்திகள்

recent
-

பங்களாதேஸ் நோக்கி பயணமாகும் மன்னார் வீரர்களை வழியனுப்பி வைத்த மாகாண சபை உறுப்பினர் .-Photos

பங்களாதேசின் தலைநகரான டாக்காவில் இடம் பெறவுள்ள 4 ஆம் 'ரோல் போல்' உலகக்கிண்ணப் போட்டியில் கலந்து கொள்ளுவதற்காக வீரர்,வீராங்கனைகள் அடங்கிய குழு ஒன்று இலங்கையில் இருந்து இன்று வியாழக்கிழமை அதிகாலை பங்களாதேஸ் நோக்கி பயணமாகின்றனர்.

குறித்த குழுவில் மன்னார் மாவட்டத்தில் இருந்து நான்கு வீரர்கள் பங்களாதேசிற்கு பயணமாகியுள்ள நிலையில் குறித்த வீர வீராங்கனைகளை வடமாகாண சபை உறுப்பினரும்,எதிர்க்கட்சி கொரடாவுமான றிப்பான் பதியுதீன் விமான நிலையத்திற்குச் சென்று வாழ்த்துக்களை தெரிவித்து வழி அனுப்பி வைத்துள்ளார்.

எதிர்வரும் 17 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை பங்களாதேசின் தலைநகரான டாக்காவில் 4 ஆவது தடவையாக இடம் பெறவுள்ள குறித்த 'ரோல் போல்' உலகக்கிண்ணப் போட்டியில் கலந்து கொள்வதற்காக மன்னாரில் இருந்து வீரர் ஒருவரும், வீராங்கனைகள் மூவரும் பங்களாதேஸ் நோக்கி பயணமாகியுள்ளனர்.

மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி யோ.திவ்வியா , மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் எஸ்.அருண், மன்-சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி ஏ.திவ்வியா , மற்றும் மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை மாணவி எஸ்.அன்ரலின் ஆகிய வீரர்களே தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 17 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை பங்களாதேசின் தலை நகரான டாக்காவில் 4 ஆவது தடவையாக இடம் பெறவுள்ள குறித்த 'ரோல் போல்' உலகக்கிண்ணப் போட்டியில் கலந்து கொள்வதற்காக பங்களாதேஸ் நோக்கி இன்று வியாழக்கிழமை அதிகாலை பயணமாகியுள்ளனர்.

குறித்த வீர வீராங்கனைகளை வடமாகாண சபை உறுப்பினரும்,எதிர்க்கட்சி கொரடாவுமான றிப்பான் பதியுதீன் விமான நிலையத்திற்குச் சென்று வாழ்த்துக்களை தெரிவித்து வழி அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நிருபர்-

(16-2-2017)








பங்களாதேஸ் நோக்கி பயணமாகும் மன்னார் வீரர்களை வழியனுப்பி வைத்த மாகாண சபை உறுப்பினர் .-Photos Reviewed by NEWMANNAR on February 16, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.