அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு..! 2 பேர் பலி


பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாராளுமன்ற வளாகத்தின் வெளியே நடந்த இந்த சம்பவத்தில் இரு நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதோடு, பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்த சம்பவம், துப்பாக்கிசூடு எனவும், இதில் பலர் காயமடைந்துள்ளதாகவும் Scotland Yard தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


எவ்வாறாயினும், பாராளுமன்ற வளாகத்துக்குள் கத்தியோடு ஒருவர் இருந்ததை பார்த்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை, பிரித்தானிய பாராளுமன்றின் ஒட்டுமொத்த வளாகமும் பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு..! 2 பேர் பலி Reviewed by NEWMANNAR on March 23, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.