44 பயணிகள் பரிதாப பலி....சூடானில் விபத்துக்குள்ளான விமானம்.....
தெற்கு சூடானில் விமான விபத்து நடந்துள்ளது. இதில் 44 பயணிகள் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெற்கு சூடானில் சுப்ரீம் ஏர்லைனர் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகியது. இதில் பயணம் செய்த 44 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விமானம் ஓடுபாதையில் தரையிறங்கும் போது திடீரென தீப்பிடித்து இந்த விபத்து நிகழந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அங்கு மீட்பு பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
44 பயணிகள் பரிதாப பலி....சூடானில் விபத்துக்குள்ளான விமானம்.....
Reviewed by Author
on
March 21, 2017
Rating:
No comments:
Post a Comment