அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் பன்றிக்காய்ச்சல் தொற்று தீவிரம் : மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை.

வவுனியாவில் கடந்த சில தினங்களில் 22 பேருக்கு பன்றிக்காச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.



வவுனியாவில் அண்மையில் பன்றிக்காய்ச்சல் தொற்று காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தொற்று ஏற்பட வாய்புக்கள் அதிகம் உள்ளதால் சிறுவர்களையும், குழந்தைகளையும் தேவையின்றி வைத்தியசாலையில் தங்கியுள்ள உறவினர்களைப் பார்வையிடுவதற்கு அழைத்து வருவதைத் தவிர்க்குமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது.



குறிப்பாக கர்ப்பிணித்தாய்மார் மற்றும் சிறுவர்கள் அவதானமாக இருக்குமாறும், தற்போது 22 பேருக்கு பன்றிக்காச்சல் இனங்காணப்பட்டு 16 பேர் சிகிச்சையின் பின்னர் வீடு சென்றுள்ளதாகவும் 5 பேர் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,

இதேவேளை ஒருவர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலைப்பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.



அத்துடன் வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலைக்கு வரும் குழந்தைகள், சிறுவர்கள் அனைவருக்கும் சுவாசத்தை பாதிக்காதவாறு முககவசம் அணிந்து பாதுகாப்புடன் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


வவுனியாவில் பன்றிக்காய்ச்சல் தொற்று தீவிரம் : மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை. Reviewed by NEWMANNAR on March 12, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.