அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தி.வினோதினி எழுதிய'இராப்பாடிகளின் நாட்குறிப்பு' கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா

மன்னார் தி.வினோதினி எழுதிய 'இராப்பாடிகளின் நாட்குறிப்பு' கவிதைத்தொகுப்பு நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.
-மன்னார் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில்,அதன் தலைவர் எஸ்.ஏ.உதயன் தலைமையில் குறித்த நூல் வெளியீட்டு விழா இடம் பெறவுள்ளது.

குறித்த வெளியீட்டு விழாவிற்கு பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா , சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய,மற்றும் கௌரவ விருந்தினர்களாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மேல்,மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் க.கமலேஸ்வரன்,திட்டமிடல் பணிப்பாளர் கி.சிறிபாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


-மன்னார் நிருபர்-
(8-03-2017)

மன்னார் தி.வினோதினி எழுதிய'இராப்பாடிகளின் நாட்குறிப்பு' கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா Reviewed by NEWMANNAR on March 08, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.