அண்மைய செய்திகள்

recent
-

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான மாவட்ட அலுவலகம் வெள்ளியன்று மன்னார் நகரில் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைப்பு-(படம்)

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் 68 வது பிறந்த தினமான கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான மாவட்ட அலுவலகம் மன்னார் நகரில் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ஏ. சமீயூ முகம்மது பஸ்மி தலைமையில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதனின் இணைப்புச் செயலாளர் Nஐ. பிறைம்லஸ் கொஸ்ரா பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த மாவட்ட அலுவலகத்தினை திறந்து வைத்தார்.
மேற்படி வைபவத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் மன்னார் தொகுதி அதிகார சபை நிர்வாகிகள்,கட்சிக்கிளைகளின் தலைவர்கள், இளைஞர் அமைப்பு மற்றும் பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் சுமார் 40 வருடங்களுக்கு பின்னர் நிகழ்ந்த குறித்த திறப்பு விழா வைபவத்தில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்துவத்தையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.




-மன்னார் நிருபர்-
(28-03-2017)







ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான மாவட்ட அலுவலகம் வெள்ளியன்று மன்னார் நகரில் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைப்பு-(படம்) Reviewed by NEWMANNAR on March 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.