அண்மைய செய்திகள்

recent
-

வடகொரியாவுக்கு ஆப்பு? அமெரிக்காவுடன் இணைந்து சீன கடலில் ஜப்பான் செய்த செயலால் பதற்றம்!


அமெரிக்கா கடற்படையும், ஜப்பான் கடற்படையும் ஒன்றாக இணைந்து கிழக்கு சீனக் கடலில், கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவத்தைக் கண்டு உலகநாடுகள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளன.

வடகொரியா இந்த வாரத்திற்கு முன்னர் 4 ஏவுகணைகளை ஜப்பானை ஒட்டியுள்ள பிராந்தியத்தில் ஏவி சோதனை செய்தது.

இந்நிலையில் நான்கு நாட்கள் கூட்டுப்பயிற்சி ஒன்றை அமெரிக்க கடற்படையும், ஜப்பான் கடற்படையும் இணைந்து கிழக்கு சீனக் கடலில் செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கும், ஜப்பானிற்கும் கிழக்கு சீனக்கடல் பகுதியில் தீவுகளை உரிமைக் கோருவதில் பிரச்னை இருந்து வருகிறது.

இந்நிலையில், இருநாடும் இணைந்து பயிற்சி மேற்கொண்டிருப்பது உலகநாடுகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இரு நாடுகளின் இச்செயலைக் கண்டு சீனா கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த பயிற்சி வடகொரியாவை மிரட்ட வேண்டும் என்பதற்காக செய்யப்பட்டதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.



வடகொரியாவுக்கு ஆப்பு? அமெரிக்காவுடன் இணைந்து சீன கடலில் ஜப்பான் செய்த செயலால் பதற்றம்! Reviewed by Author on March 11, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.