அண்மைய செய்திகள்

recent
-

101 வயதில் ஸ்கைடைவ் அடித்து உலகசாதனை படைத்த பிரித்தானியர்....


பிரித்தானியாவைச் சேர்ந்த 101 வயதான முதியவர் ஒருவர் 15 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து ஸ்கைடைவ் அடித்து உலக சாதனை படைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாம் உலகப்போரில் பிரித்தானியா சார்பாக கலந்துகொண்டவரும் தற்போது 101 வயது நிரம்பியவருமான எர்டோகன் பல வருடங்களாக ஆர்வத்துடன் ஸ்கை டைவிங்கில் ஈடுபட்டுவருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய 101 வயதில் 15 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பாராஷூட் துணையுடன் குதித்து தற்போது உலக சாதனை படைத்துள்ளார்.


இதன்மூலம் 2014ம் ஆண்டு அர்மந்த் என்பவர் நிகழ்த்திய கின்னஸ் சாதனையை எர்டோகன் முறியடித்துள்ளார்.

எர்டோகன் ஏற்கனவே இங்கிலாந்து அளவில் அதிக வயதில் ஸ்கைடைவ் அடித்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேசிய அவர், ஸ்கைடைவ் அடிப்பது எனக்கு மிகவும் பிடித்த சாகச விளையாட்டு. இப்படியொரு உலக சாதனையை நிகழ்த்த வேண்டும் என முன்பே நினைத்திருந்தேன்,

ஆனால் என் வயதை காரணம் காட்டி என் மனைவி அனுமதிக்க மறுத்துவிட்டாள். இருப்பினும் அவளை சமாதானாம் செய்துவிட்டு, இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளேன். தற்போது மிகுந்த மனநிறைவாக உணர்கிறேன் என தெரிவித்துள்ளார்.

101 வயதில் ஸ்கைடைவ் அடித்து உலகசாதனை படைத்த பிரித்தானியர்.... Reviewed by Author on May 19, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.