அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் அடம்பனில் நினைவு அழியா நினைவேந்தல் மே-18

மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழினப் படுகொலை நினைவு நாள் நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாக இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட உறவினர்களின் பங்கேற்புடன் எதிர் வரும் 18 ஆம் அனுஸ்ரிக்கப்படவுள்ளதாக மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.

மன்னார் அடம்பனில் எதிர்வரும் 18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.15 மணிக்கு தமிழினப் படுகொலை நினைவு நாள் நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாக இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட உறவினர்களின் பங்கேற்புடன் அனுஸ்ரிக்கப்படவுள்ளது.

எனவே அனைவரையும் கலந்து கொண்டு அவர்களது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். எனவும்,குறித்த நினைவேந்தல் நிகழ்வில் அணைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

-மன்னார் நிருபர்-
(15-5-2017)

மன்னார் அடம்பனில் நினைவு அழியா நினைவேந்தல் மே-18 Reviewed by NEWMANNAR on May 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.