அண்மைய செய்திகள்

recent
-

இந்தியாவில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட 18 இலங்கையர்களை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்...


இந்தியாவில் பிரபல தனியார் வாகன நிறுவனத்தில் பணியாற்றும் 18 இலங்கை தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியிருக்கும் நிலையில், அவர்களை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் சோசலிச சமத்துவக் கட்சியினால் ஹட்டன் பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது இந்தியாவின் பிரபல தனியார் வாகன நிறுவனத்தில் (மாருதி சுசூகி) பணியாற்றிய 18 ஊழியர்களுக்கு கொடுத்திருக்கும் ஆயுள் தண்டனையிலிருந்து விடுதலை செய்ய அழுத்தம் கொடுக்கும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட 18 இலங்கையர்களை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்... Reviewed by Author on May 21, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.