புறப்பட தயாராக இருந்த பயணிகள் விமானம்: திடீரென்று வந்த ஸ்பெயின் போர் விமானம்...
கிப்ரால்ட்டார் விமான நிலையத்தின் அருகே ஸ்பெயினுக்குச் சொந்தமான போர் விமானம் ஒன்று திடீரென்று வந்ததால், லண்டன் செல்லவிருந்த பயணிகள் விமானம் சற்று தாமதமாக புறப்பட்டுச் சென்றுள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்று Gibraltar விமானநிலையத்தில் இருந்து லண்டனுக்கு செல்வதற்கு வானில் பறப்பதற்கு தயாராக இருந்தது.
அப்போது திடீரென்று ஸ்பெயினைச் சேர்ந்த போர் விமானம் என்று அழைக்கப்படும் P3 Orion அவ்விமான நிலையத்திற்கு அருகில் சென்றுள்ளது.
இதனால் பதற்றமடைந்த அதிகாரிகள் உடனடியாக லண்டன் செல்லவிருந்த விமானத்தை புறப்பட வேண்டாம் என்று கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு பின்னர் பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றுள்ளது.
இது குறித்து Gibraltar-இன் முதல் அமைச்சர் கூறுகையில், ஸ்பெயினின் போர் விமானம் எப்போதும் செல்லும் பாதையில் செல்லாமல் திடீரென்று பாதை மாறி சென்றுள்ளது.
அவ்விமானம் எப்போதும் செல்லும் பாதையில் செல்லும் என்று தான் அதிகாரிகள் பயணிகள் விமானம் புறப்படுவதற்கு சிக்னல் கொடுத்துள்ளனர். ஆனால் திடீரென்று ஸ்பெயினின் போர் விமானநிலையத்திற்கு அருகில் சென்றுள்ளது.
இது ஒரு எல்லை மீறிய செயல். பிற்பகல்வேளை என்பதால், அந்த நேரத்தில் ஏராளமான விமானங்கள், விமான நிலையத்தில் இருந்து புறப்படும், தரையிரங்கும்.
இதை எல்லாம் அறிந்தும் ஸ்பெயின் இது போன்ற செயலில் ஈடுபட்டிருப்பது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் திடீரென்று ஸ்பெயின் போர் விமானம் எல்லை மீறி வந்ததால், விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.
புறப்பட தயாராக இருந்த பயணிகள் விமானம்: திடீரென்று வந்த ஸ்பெயின் போர் விமானம்...
Reviewed by Author
on
May 06, 2017
Rating:
No comments:
Post a Comment