அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தபால் ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தம்-மக்கள் பாதிப்பு (படங்கள் )

தபால் ஊழியர்கள் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேரம் அடையாள வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ள நிலையில் மன்னார் அஞ்சல் அலுவலக பணியாளர்களும் அடையாள வேலை நிறுத்தத்தை இன்று செவ்வாய்க்கிழமை (13) காலை முதல் ஆரம்பித்துள்ளனர்.

-நுவரெலியா,கண்டி,காலி ஆகிய தபாற் காரியலாயங்களை உள்ளாச பயணத்துறைக்கு பயண்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்புத்தெரிவித்தும்,கொழும் பு பிரதான தபால் காரியாலய கட்டிடத்தில் மீண்டும் தபால் காரியாலயத்தை ஆரம்பிக்காமை , ஊழியர் சட்ட மூலத்தை திருத்தி நடமுறைப்படுத்தாமை உள்ளிட்ட நிர்வாகத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலே குறித்த அடையாள வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

-மன்னார் பிரதான அஞ்சல் அலுவலகம் மற்றும் மன்னாரில் உள்ள உப அஞ்சல் அலுவலகங்கள் போன்றவற்றில் கடமையாற்றுகின்ற பாணியாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை(13) காலை முதல் அடையாள வேலை நிறுத்தத்தை ஆரம்பித்ததன் காரணமாக மன்னாரில் உள்ள அஞ்சல் அலுவலகங்கள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

-இதனால் பல்வேறு தேவைகளுக்காக செல்லும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.





மன்னாரில் தபால் ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தம்-மக்கள் பாதிப்பு (படங்கள் ) Reviewed by NEWMANNAR on June 13, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.