அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரின் செற்பாடுகள் வழமை போல்.....(படம்)

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை (16) வடக்கின் பல இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஹர்த்தால் அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மன்னார் மாவட்டத்தின் செயற்பாடுகள் வழமை போன்று காணப்படுகின்றது.

மாகாணசபை உறுப்பினர்கள் சிலரினால், வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கண்டித்து, வடக்கு மாகாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை (16) கடையடைப்பை மேற்கொள்ளுமாறு, தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்திருந்தது.

குறுகிய முன்னறிவிப்பை பொறுத்துக்கொண்டு, இனத்தின் நலன்கருதி எமது உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்குடன், அனைவரும் இந்தக் கடையடைப்புக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை விடுத்திருந்தது.

-இந்த நிலையில் வவுனியா,கிளிநொச்சி,முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஹர்த்தால் அனுஸ்ரிக்கப்பட்டது.

-எனினும் மன்னாரில் வழமையான செயற்பாடுகள் இடம் பெற்றது.அரச மற்றும் தனியார் பேரூந்துகள் வழமை போல் செயற்பட்டது.வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில் மன்னார் நகர் பகுதியில் மக்களின் நடமாட்டம் வழமை போல் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







மன்னாரின் செற்பாடுகள் வழமை போல்.....(படம்) Reviewed by NEWMANNAR on June 16, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.