அண்மைய செய்திகள்

recent
-

புனித ஆனாள் அன்னையின் 137வது வருட திருவிழா....மிகவும் சிறப்பாக நடைபெற்றது(Photoes)

மன்னார் மறைவாட்டத்தின் கத்தோலிக்ககிராமம் வங்காலையில்  வீற்றிருக்கும் பாதுகாவலியான புனித ஆனாள் அன்னையின் 137வது வருட திருவிழாவிற்கான முதல்நாள் ஆயத்த நவநாள் திருப்பலி  17-07-2017 அன்று பங்குத்தந்தை ஜெயபாலன் அவர்களினால் அன்னையின்  கொடி ஆசிர்வதித்தலுடன் பங்குமக்கள் அருட்சகோதரிகள் ஏனைய பங்கின் அருட்தந்தையர்கள் பொதுநிலையினரும் கலந்து கொள்ள ஆரம்பமானது.

17-07-2017 அன்றிலிருந்து  09நாட்கள் நவநாள்களும் நற்கருணை வழிபாடும் இடம் பெற்று புனித ஆனாள் ஆலய வருடாந்த திருவிழா புதன் கிழமை (26.07.2017) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

 மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை  பிரதம விருந்தினராக ஏனைபங்குகளின் அருட் தந்தையர்கள்  அருட் சகோதரிகள் இன்னியம் இனிய இசையுடன் அழைக்கப்படுவதையும் -ஆயர் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையின் தலைமையில் திருவிழா திருப்பலி அருட்தந்தையர்களுடன்  இணைந்து கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படுவதையும் வலம்புரிச் சங்கு சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் அன்னையின் திருச்சுரூபம் பக்தர்கள் படைசூழ நடுவே வலம் வந்து தனது பக்தர்களுக்கு ஆசிர் வழங்கினாள் அன்னை பங்குமக்கள் திருவிழா வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்ந்தனர்.

பாதுகாவலியான புனித ஆனாள் அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்,,,,,,












புனித ஆனாள் அன்னையின் 137வது வருட திருவிழா....மிகவும் சிறப்பாக நடைபெற்றது(Photoes) Reviewed by Author on July 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.