அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் பிரதான வீதியில் டிப்பர் மோதி மாணவி உயிரிழப்பு…Photos

தலைமன்னாரில் இருந்து மன்னார் நோக்கி வந்த டிப்பரும் மன்னாரில் இருந்து பேசாலை நோக்கி போய்க்கொண்டு இருந்த பேரூந்தில் இருந்து கரிசல் சந்தியில் பாடசாலை மாணவி இறங்கியுள்ளர் அத்தருணத்தில் பேரூந்தின் அருகினில் உரசிக்கொண்டு சென்ற டிப்பரானது குறித்த மாணவியை மோதி சுமார் 50மீட்டர் வரை தூக்கி வீசியுள்ளது. சம்பவஇடத்திலே மாணவி உயிரிழந்துள்ளர். இன்று 18-07-2017 மதியம் 2- 30 ம்ணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

புதுக்குடியிருப்பில் வசிக்கும் றிப்ரி அவர்களின் மகளான பாத்திமா றிஸ்னா பானு தரம் 05ந்தில் புதுக்குடியிருப்பு அ.த.மு.பாடசாலையில் கல்வி பயிலும் மாணவியே இவ்விபத்தில் உயிரிழந்தவராவார்.
மேலும் சம்பவம் தொடர்பாக  மாணவி மீது மோதிய டிப்பர் சாரதி நிற்காமல் வேகமாக தப்பியோட முற்பட்டபோது கிராம இளைஞர்களால் மடக்கிப்பிடித்து நையப்புடைத்து டிப்பரையும் சேதப்படுத்தியபோது சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் டிப்பர் சாரதியையும் அவரது உதவியாளரையும் கைதுசெய்ததுடன் அவர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் அவர்களை சிகிச்சைக்காக மன்னார் பொதுவைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

அத்தோடு விபத்து நடந்த பகுதியினை பார்வையிட்ட பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டனர் சம்பவ இடத்திற்கு வந்த நீதவான்  ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ் ராஜா மரணவிசாரணை மேற்கொண்டார். குறித்த மாணவியின் உடலம் பிரேதபரிசோதணைக்காக மன்னார். பொதுவைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

வேகத்தினைக்குறைப்போம் விவேகமாக வாகனங்களை செலுத்துவோம்.

உயிரின் பெறுமதி உணருங்கள்…. அக்குடும்பத்தின் நிலையை எண்ணிப்பாருங்கள்….



 




















தலைமன்னார் பிரதான வீதியில் டிப்பர் மோதி மாணவி உயிரிழப்பு…Photos Reviewed by Author on July 18, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.