அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் உலர் வலய நகர நீர் மற்றும் சுகாதார திட்டத்தின் கீழ் நீர் வழங்கல் திட்டம் ஆரம்பித்து வைப்பு-(Photos)

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நகர திட்ட மிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையுடன் இணைந்து செயற்படுத்தும் உலர் வலய நகர நீர் மற்றும் சுகாதார திட்டத்தீன் கீழ் அமைக்கப்பட்ட எழுத்தூர் நீர் உள்வாங்கும் நிலையத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை (7) மாலை வைபவ ரீதியாக திறந்து வைத்தார். திட்டத்தின்

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே ஆகியோரின் அழைப்பின் பேரில் அமைச்சர் றிஸாட் பதியுதீன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஸ்ரீ விடோவதி, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், எம்.மன்சூர், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்து கொண்டு திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

இதன் போது மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை மற்றும் சர்வமத தலைவர்கள்,திணைக்கள தலைவர்கள்,வடமாகாண சபை உறுப்பினர்கள்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

சுமார் 2,200மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் இக்கருத்திட்டம் பூர்த்தியடையும் போது 55 ஆயிரம் மக்கள் பயனடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.









மன்னாரில் உலர் வலய நகர நீர் மற்றும் சுகாதார திட்டத்தின் கீழ் நீர் வழங்கல் திட்டம் ஆரம்பித்து வைப்பு-(Photos) Reviewed by NEWMANNAR on July 07, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.