அண்மைய செய்திகள்

recent
-

சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக வடக்கில் போராட்டம்! |

வட. மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் இனப் பரம்பலை சிதைக்கும் வகையிலான சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக மாபெரும் எதிர்ப்புப் பேரணியொன்று நடத்தப்படவுள்ளது.
‘சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான இளைஞர் அணி’ என்ற அமைப்பின் ஏற்பாட்டில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்த மாபெரும் எதிர்ப்புப் பேரணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) முல்லைத்தீவில் நடத்தப்படவுள்ளது.Mulla-
இயற்கை சமநிலையை குழப்பும் விதமான சட்டவிரோதக் குடியேற்றங்களை தடை செய்யுங்கள் என்பதை வலியுறுத்தி, முள்ளியவளை காட்டா விநாயகர் கோவிலிலிருந்து கூழாமுறிப்பு நோக்கி குறித்த பேரணி இடம்பெறவுள்ளது.mullai
முல்லைத்தீவு மாவட்டத்தில் கூழாமுறிப்பு கிராமத்துக்கு அருகில் உள்ள முள்ளியவளைக்கும் – ஒட்டுசுட்டான் வீதிக்கும், நெடுங்கேணி – புளியங்குளம் வீதிக்கும் இடைப்பட்ட 177 ஏக்கர் வாரிவண்ணான் காட்டை அழித்து முஸ்லிம்களைக் குடியேற்றம் செய்யும் முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக வடக்கில் போராட்டம்! | Reviewed by NEWMANNAR on July 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.