அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் நடைபெற்ற மக்களின் கையெழுத்து பதிவு மகஜர் வடமாகாண முதலமைச்சரிடம் கையளிப்பு



மன்னாரின் எழுச்சி...... அதுவே எங்களின் முயற்சி........... எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய 16விடையங்கள் அடங்கிய அறிக்கையினை....

மன்னனார் மாவட்டத்தினை எழுச்சிப்பாதையில் கொண்டு செல்லவேண்டுமானால் அதிகாரிகளும் மக்களாகிய நாமும் இனம்-மதம் மொழி பிரதேசவாதம் இவற்றினை கைவிட்டு வேற்றுமை மறந்து ஒற்றுமையாக ஓரணியில் ஒன்றினைய வேண்டும்.
ஒற்றுமையுடன் செயலாற்றினால் எமது மன்னார் மாவட்டமானது ஏனைய மாவட்டங்களை விட சிறந்த மாவட்டமாக முதன்மையான மாவட்டமாக மிளிரும் என்பதில் ஜயம் இல்லை….

அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்….முதலில் இவற்றினை உருவாக்குவோம்……
1.மன்னார் மாவட்டத்திற்கு வரவேற்பு கோபுரம்-welcome tower வேண்டும்

2.மன்னார் மாவட்டத்திற்கு மணிக்கூட்டுக்கோபுரம்-clock tower வேண்டும்

3.மன்னார் மாவட்டத்திற்கு சமிக்ஞை விளக்குகள்-signal lightபொருத்த வேண்டும்.

4.மன்னார் மாவட்டத்தின் பொது நூலுகம் சிறப்பாக உருவாக்குவதோடு கிராமப்புற நூலகங்களையும் தரமுயர்த்துதல் வேண்டும்.
5.மன்னார் மாட்டத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குதல் அவசியம்(கல்வியால் தான் இவ்வுலகில் நிலைத்து நிற்கமுடியும்)
6.மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் மின்விளக்குகள் பொருத்துவதோடு தூய்மையான மன்னார் மாவட்டத்தினை உருவாக்குதல் வேண்டும்.
7.மன்னார் மாவட்டதிற்திற்கு சிறந்த முறையில் ரவுண்-Town பகுதி அமைத்தல் வேண்டும்

8.மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீதிகளும் தரமான முறையில் புனரமைக்கப்பட்டு  மஞ்சள் கோடு மற்றும் வெள்ளக்கோடு குறியீட்டுப்பலகைகள் அமைத்தல் வேண்டும்.
9. மன்னார் பொதுவைத்திய சாலை உட்பட ஏனைய கிராமப்புற வைத்தியசாலைகளுக்கும் தரமான நவீன உபகரணங்களும் நிபுணத்துவமும் கடமையுணர்வும் உள்ளவர்களை நியமிக்கபட வேண்டும்.
10.    மன்னார் மாவட்டத்தில் உள்ள புராதன சின்னங்கள்  அடையாளப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படவேண்டும்.(12மேற்பட்டவை உள்ளது)
11.    மன்னார் மாவட்டத்தில் சிறந்த பொழுதுபோக்கு பூங்கா வேண்டும்.
12.    மன்னார்க்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மன்னாரின் சிறப்பை அறியும் பொருட்டு சுற்றுலா கையேடு ஒன்று உருவாக்கப்படவேண்டும்.
13.    மன்னார் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு கழகங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து மன்னார் மாவட்ட விளையாட்டு சம்மேளனம் ஒன்றை உருவாக்குவதோடு ஆண்டுக்கு ஒவ்வொருதடவையும் வீரவீராங்கனைகளையும் பயிற்றுனர்களையும்  அதிகாரிகளையும்  கௌரவித்தல் வேண்டும்.
14. மன்னார் மாவட்டத்தின் வளங்கள் சுரண்டப்படுகின்றது அவற்றைத்தடுக்கவேண்டும் குறிப்பாக மணல்-மரம் இன்னும்.
15. மாற்றுத்திறனாளிகளுக்கான அரச அரசசார்பற்ற திணைக்களங்கள் நிறுவனங்கள் அனைத்திலும் தமது தேவையை பூர்த்தி செய்யும் விதமாக அமைதல்.
16. இன்னும் ஏராளமான விடையங்கள் இருக்கு முயன்றால்  முடியாதது என்று எதுவும் இல்லை
முயற்சிப்போம். முடியும் வரை…..

முன்வைத்து மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்டம் அதிலும் முதல் இரண்டு விடையங்களாக
மணிக்கூட்டுக்கோபுரம்-clock tower
வரவேற்புக்கோபுரம்-welcome tower-
மன்னாரின் அடையாளமும் அழகு சார்நத விடையங்களை முன்னிறுத்தி அமைப்பின் இயக்குனர் வை.கஜேந்திரன் தலைமையில் 02-08-2017 அன்று மன்னார் பழைய நூலகத்திற்கு முன்பாக நான்கு மதத்தலைவர்களின் ஆசியுடன் உத்தியோகபூர்வமாக கையெழுத்துப்பதிவானது ஆரம்பமானது.

இக்கையெழுத்துப்பதிவானது மாணவர்கள் இளைஞர்கள் யுவதிகள் பொதுமக்கள் பொதுஅமைப்புக்கள் என எல்லோரும் தமது விருப்பத்தினை கையெழுத்துக்களாக பதிவு செய்தனர் 02-08-2017 தொடக்கம் 08-08-2017 நிறைவு பெற்று 09-08-2017 அன்று வடமாகாண முதலமைச்சர் மாண்புமிகு நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களிடம் அவரது அலுவலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து…..
  • வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களிடமும்.
  • மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் விக்ரர் சோசை அவர்களிடமும்
  • வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களிடமும்
  • மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய அவர்களிடமும்
  • மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டி மெல் அவர்களிடமும்
  • மன்னார் மாவட்ட பிரதேச செயலாளர் எம்.பரமதாசன் அவர்களிடமும்
  • மன்னார் நகர சபைச்செயலாளர் X..L.பிறிட்டோ அவர்களிடமும்
  • மன்னார் மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்கள நிறைவேற்றுப்பொறியியலாளர் V,G,R,ஜிப்ரி அவர்களிடமும்
பதிவுத்தபாலில்…..
  • கௌரவ ஜனாப் றிஷாட்பதியுதீன் கைத்தொழில் வணிக அமைச்சர்
  • கௌரவ ஜனாப் கே.கே.மஸ்த்தான் பாராளுமன்ற உறுப்பினர் வன்னி
  • கௌரவ ரெஜினோல்ட் குரே ஆளுநர் வடமாகாணம் 
கையளித்துள்ளார்கள். மக்களின் விருப்பமும் எதிர்பார்ப்பும் மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்டஅமைபிபனரின் முயற்சியும் வெற்றியளிக்கவேண்டும்.
மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்ட அமைப்பினரிடம் கையெழுத்துப்பதிவு கையளிப்பின் அதிகாரிகள் கூறியவை யாவை.....
முதலமைச்சர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசஅதிகாரிகள் அனைவரினதும் ஏகமனதான கருத்து மன்னாருக்கு இவை அவசியமாகதேவைதான் என்பதையும் மன்னார் மக்கள் இவ்வளவுபேர் ஆதரிக்கின்றார்கள் அவர்களின் விருப்பங்கள் நிறைவேறும் அதற்கான முயற்சிகளைமேற்கொண்டு விரைவாகவும் முதலில் வரவேற்புக்கோபுரத்தினை அமைப்போம் அதற்கான திட்டவேலைகளை ஆரம்பிக்கலாம்…

வரவேற்புக்கோபுரம் தொடர்பான அனுமதி பெறலும் அதன் செலவினங்கள் தொடர்பான அறிக்கையினையும்(Welcome tower  design&Estimate(BOQ)

Provincial Director

R.D.D 
vavuniya


Chief Ingineer

R.D.A 
vavuniya


Executive Engineer

R.D.A 
Mannar

மேலே குறிப்பிட்ட வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கவேண்டும் அது தொடர்பான வேலையில் மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைப்பினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.மக்களினதும் அரசாங்க அதிகாரிகளினதும் ஒத்துழைப்போடு மன்னாரை அடையாளமாக தோற்றம் பெறஇருக்கின்றது மன்னாரின் வரவேற்புக்கோபுரம்.

இச்செயட்பாட்டின் தொடர்ச்சியா  அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நியூமன்னார் இணையம் வெளிப்படுத்தும் அத்தோடு இவ்முயற்சி வெற்றிபெற நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்துகின்றோம்....
 







மன்னாரில் நடைபெற்ற மக்களின் கையெழுத்து பதிவு மகஜர் வடமாகாண முதலமைச்சரிடம் கையளிப்பு Reviewed by Author on August 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.