அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கூராய் உள்ளக வீதி இராணுவத்தினரால் புனரமைப்பு,,,,

மன்னார் மாவட்டத்தின் மாந்தை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கூராய் கிராமத்தின்  உள்ளக பிரதான வீதியானது  அங்கு பணியில் இருக்கும் இராணுவத்தினரால் குழிகளை மூடி கிறவல் பரப்பி புனரமைக்கப்பட்டு வருகின்றது.

இக்கிராமத்தில் சுமார் 40 குடும்பங்களுக்கு மேல் உள்ளனர் அது போல சீதுவகிராமத்தில் 80 குடும்பங்களும் கள்ளியடி-ஆத்திமோட்டை-கூராய் சீராட்டிக்குளம் இக்கிராமக்களின் பாவனைப்பாதையாக இருக்கின்றது. அத்துடன் இப்பாதையூடாக மல்லாவி வரை செல்லலாம்  நீண்ட காலமாக குண்டும் குழியுமாக மழைநீர் தேங்கி மக்களின் பாவனைக்கு மிகவும் சிரமாக இருந்துவந்த 15 கிலோ மீற்றர் பாதையானதும் குறிப்பாக மாணவர்களின் கல்விச்செயற்பாட்டிற்கு இடையூறாக உள்ளது.

இங்கு யாட் வைத்து மணல் ஏற்றுமதி செய்யும் நபர்கள் இதைக்கண்டு கொள்வதில்லை மக்கள் படும் துன்பத்தினை அரச அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை

 இப்பகுதியில்  மணல் ஏற்றுமதி அதிகமாக இருப்பதால் டிப்பர் மற்றும் ரக்ரர் வாகனங்கள் அதிக பயணம் செய்வதனால் இவ்வீதியானது குண்டும் குழியுமாக
காட்ச்சியளிக்கும் இராணுவத்தினர் குழிகளை மூடிவரும் வேளை அது இரண்டொரு நாளில் மீண்டும் குண்டும் குழியுமாகி விடும் இதற்கான தீர்வுதான் என்ன......... மக்கள் கவலையுடன்........மழைகாலம் வருகின்றது......
 




மன்னார் கூராய் உள்ளக வீதி இராணுவத்தினரால் புனரமைப்பு,,,, Reviewed by Author on August 17, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.