அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாந்தை மேற்கு பாப்பாமோட்டை பகுதியில் சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் மீட்பு-(படம்)


மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாப்பாமோட்டை கிராம அலுவலகர் பிரில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை(4) காலை சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் சிலவற்றை பாதுகாப்புத்தரப்பினர் மீட்டுள்ளனர்.

அடம்பன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பாப்பாமோட்டை கிராம அலுவலகர் ஊடாக பாப்பாமோட்டை காட்டுப்பகுதியில் வெடிக்காத நிலையில் உள்ள வெடி பொருட்கள் தொடர்பில் மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

-இந்த நிலையில் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக குறித்த வெடி பொருட்கள் இன்று வெள்ளிக்கிழமை(4) காலை மீட்கப்பட்டது.

-அடம்பன் பொலிஸ்,இராணுவம்,மற்றும் விமானப்படையினர் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை 04-08-2017 காலை குறித்த பகுதிக்குச் சென்று அடையாளம் காணப்பட்ட வெடிக்காத நிலையில் உள்ள வெடி பொருட்களை மீட்டுள்ளனர்.

இதன் போது மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன்,பாப்பாமோட்டை கிராம அலுவலகர் ஆகியோர் குறித்த இடத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளினால் குறித்த வெடி பொருட்கள் கடந்த காலங்களில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட வெடி பொருட்களை செயல் இழக்கச் செய்யும் நடவடிக்கையில்,வெடி பொருட்களை மீட்ட குழுவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 -மன்னார் நிருபர்-
 








மன்னார் மாந்தை மேற்கு பாப்பாமோட்டை பகுதியில் சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் மீட்பு-(படம்) Reviewed by Author on August 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.