மன்னார் பொன்தீவு கண்டல் கிராமத்தில் கணணி பயிற்சியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றுதல் வழங்கி வைப்பு-PHOTOS
நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பொன்தீவு கண்டல் கிராமத்தில் 'பிரன்ஸ் இன் நீற்' நற்பனி மன்றத்தினால் கடந்த 3 மாதங்கள் நடாத்தப்பட்ட இலவச கணணி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றுதல் வழங்கும் நிகழ்வு நேற்று(13) ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணியளவில் பொன்தீவு கண்டல் தூய அந்தோனியார் ஆலயத்தில் இடம் பெற்றது.
பொன்தீவு கண்டல் பங்குத்தந்தை பீற்றர் லோறன்ஸ் லியோ தலைமையில் இடம் பெற்ற குறித்த சான்றிதல் வழங்கும் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,மற்றும் விருந்தினர்களாக தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ சர்வதேச அபிவிருத்திக் குழு பிரதி நிதி ஏ.நித்தியானந்தம், ஆசிரியர் ஏ.தயாகரன், கவிஞர் சொக்கலிங்கம்,மற்றும் டெலோ முக்கிஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-இதன் போது கடந்த 3 மாதம் இடம் பெற்ற கணணி பயிற்சியை பூர்த்தி செய்த 39 மாணவர்களுக்கு வைபவ ரீதியாக சாற்றுதல் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது கலை நிகழ்வுகளும் இடம் பெற்றது.குறித்த சான்றுதல் வழங்கும் நிகழ்வில் பொன்தீவு கண்டல் கிராம மக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பொன்தீவு கண்டல் கிராமத்தில் கணணி பயிற்சியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றுதல் வழங்கி வைப்பு-PHOTOS
Reviewed by NEWMANNAR
on
August 14, 2017
Rating:
No comments:
Post a Comment