அண்மைய செய்திகள்

recent
-

சத்திர சிகிச்சை பயிற்சிக்கான தேர்வில் மன்னார் வைத்திய அதிகாரி செபஸ்தியான் பிள்ளை தர்சனும் தெரிவு-Photos

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வைத்திய துறைக்கான பட்டப்படிப்பின் படிப்பு நிறுவகம் நடாத்திய சத்திரச்சிகிச்சை முதுமாணி பட்டப்படிப்பின் படிப்பை பயில்வதற்கான அனுமதி தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 27 வைத்திய அதிகாரிகளில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வைத்திய அதிகாரி செபஸ்தியான் பிள்ளை தர்சனும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தெரிவுப்பரிட்சையின் முடிவுகள் கடந்த வாரம் வெளியாகியது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் மற்றும் பட்டப்படிப்பு நிறுவன பணிப்பாளர் ஆகியோர் ஒப்பமிட்டு குறித்த பெறுபேற்றை வெளியிட்டுள்ளனர்.

இவர்களில் 19 சிங்களவர்களும்,7 தமிழர்களும்,1 முஸ்ஸீம் வைத்தியரும் அடங்குகின்றனர்.

தெரிவு செய்யப்பட்ட 27 வைத்தியர்களில் மன்னாரைச் சேர்ந்த வைத்திய அதிகாரி செபஸ்தியான் பிள்ளை தர்சனும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
சத்திர சிகிச்சை பயிற்சிக்கான தேர்வில் மன்னார் வைத்திய அதிகாரி செபஸ்தியான் பிள்ளை தர்சனும் தெரிவு-Photos Reviewed by NEWMANNAR on August 09, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.