அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தின் முதலாவது இலக்கியச்சஞ்சிகை “வெள்ளாப்பு” சிறப்பாக வெளியிடப்பட்டது...முழுமையானபடங்களுடன்.

மன்னார் மாவட்டத்தின் முதலாவது இலக்கியச்சஞ்சிகை “வெள்ளாப்பு” 

விடியல் என ஆதவனின்  வருகைக்கு கட்டியம் கூறும் இரவின் இருட்டுக்கும் பகலின் வெளிச்சத்திற்கும் இடைப்படுகின்ற அந்தப்புலர்வைக்குறிக்கும் மன்னாருக்கே உரித்தான சொல்லாடலான  "வெள்ளாப்பு" என்ற பதமே சஞ்சிகையின்  பெயராகும்.

மன்னார் தமிழ்ச்சங்கத்தின் இலக்கிய சஞ்சிகை “வெள்ளாப்பு” வெளியீட்டு விழா 20.08.2017 இன்று ஞாயிறு காலை 10-30 மணிக்கு மன்னார் புதிய நகர மண்டபத்தின் கேட்போர் கூடத்தில்   தமிழ்பாரம்பரிய முறைப்படி மாலையணிவித்து வரவேற்றலுடன்  ஆரம்பமானது.

 மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் தேசியக்கலைஞர் எஸ்.ஏ உதயன் அவர்களின் தலைமையில்
இவ்விழாவிற்கு விருந்தினர்களாக
  • செந்நாற்செல்வர் ஸ்ரீ தர்மகுமாரருக்கள்
  • அருட்பணி தமிழ் நேசன் அடிகளார்
  • திரு.எஸ்.டேவிட்
  • பெ.சகாயநாதன் மிராண்டா
  • வைத்தியகலாநிதி ரூபன் லெம்பெட்
  • ஜனாப்  எம்.எம்.சபுருதீன் சட்டத்தரணி
  • எஸ்.ஜெபநேசன் லோகு சட்டத்தரணி
  • திருமதி,எடின் சுகிர்தா கலாச்சார உத்தியோகத்தர்
  • திரு.மார்ட்டின் டயஸ்
இவர்களுடன் மூத்த இலக்கியவாதிகள் எழுத்தாளர்கள் கலைஞர்கள் இலக்கிய ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்ப்பித்தனர்.
இவ்விழாவில் பிரதான நிகழ்வாக மன்னார் மாவட்டத்தின் முதலாவது இலக்கியச்சஞ்சிகை “வெள்ளாப்பு” வெளியிடப்பட்டதோடு முக்கிய நிகழ்வாக மன்னார் மண்ணில் அறப்பணியோடு தமிழ் பணியாற்றிவரும் மஹா.ஸ்ரீ தர்மகுமார குருக்கள்  அவர்களுக்கு மன்னார் தமிழ்ச்சங்கம் பொன்ன்னாடை போர்த்தி   செந்நாற்செல்வர் எனும் சிறப்பு விருதை வழங்கி கௌரவப்படுத்தியது.

மன்னார் தமிழ் சங்கம் பெருமையுடன் வெளியீடு செய்துள்ள வெள்ளாப்பு  காலாண்டு சஞ்சிகையாக பிரதி 80 ரூபாவிற்கு இலக்கிய சஞ்சிகையானது மன்னார் மாவட்டத்தின் கல்வியையும் இலக்கியத்தினையும் ஆரோக்கியமாக உருவாக்க உருவாக்யுள்ள முதலாவது இலக்கிய சஞ்சிகையாகும் இதைநாம் தான் முன்னின்று வெளிக்கொணர்தல் அவசியமாகும்
செல்வி சௌமியா அவர்களின் நடனமும் சிறப்பாக அமைய நிகழ்ச்சித்தொகுப்பினை அவைத்திலகம் ஜேர்மன் பாலா அவர்கள் வழங்க விழா மதியம் 1- 30 மணியலவில் இனிதே நிறைவுற்றது.
 






























































தொகுப்பு-வை.கஜேந்திரன்-
மன்னார் மாவட்டத்தின் முதலாவது இலக்கியச்சஞ்சிகை “வெள்ளாப்பு” சிறப்பாக வெளியிடப்பட்டது...முழுமையானபடங்களுடன். Reviewed by Author on August 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.