18 வருடங்களின் பின் முகமாலை தேவாலயத்தில் திருவிழா!
முகமாலை புனித ஆரோக்கிய மாதா ஆலையத்தின் வருடாந்த திருவிழா 18 வருடங்களி பின்னர் வெள்ளிக்கிழமை 15.09.2017 இடம்பெறவுள்ளது.
நாளை மாலை 4.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, நவநாள் வழிபாட்டுடன் திருப்பலி நடைபெற்றுவதுடன், எதிர்வரும் 17ஆம் திகதி காலை 06.30 மணிக்கு திருநாள் திருப்பலி நடைபெற்று அன்னையின் ஆசீர்வாதம் இடம் பெறவுள்ளது.
முகமாலை கடந்த காலத்தில் கடும் யுத்தம் இடம்பெற்ற பிரதேசமாக காணப்பட்டது. யுத்தகாலத்தில் சூனியப் பிரதேசமாக இருந்த முகமாலையில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்த நிலையில், இன்றளவிலும் முழுமையாக மீள்குடியேற்றம் இடம்பெறாத பிரதேசமாகவும் காணப்படுகிறது.
குறித்த பிரதேசத்தில் அதிகளவு ஆபத்தான வெடிப்பொருட்கள் காணப்படுவதோடு, தற்போது கண்ணி வெடி அகற்றும் நிறுவனங்கள் நெருக்கடிகளுக்கு மத்தியில் பணியில் ஈடுப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
18 வருடங்களின் பின் முகமாலை தேவாலயத்தில் திருவிழா!
Reviewed by Author
on
September 15, 2017
Rating:
No comments:
Post a Comment