அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தொடர் மின்தடை குறித்து அவசர கலந்துரையாடல்.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் மின் தடை தொடர்பாக ஆராய்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுவது தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடல் நாளை புதன் கிழமை(6) கொழும்பில் இடம் பெறவுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

-இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

-தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்தில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகின்றது.இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதோடு குறித்த பிரச்சினை தொடர்பாக எனது கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளேன்.

-இந்த நிலையில் மாவட்டத்தில் ஏற்பட்டு வரும் திடீர்,திடீர் மின் தடை குறித்து நான் நன்கு அறிவேன்.அந்த வகையில் மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஏற்பாட்டு வரும் மின் தடை தொடர்பில் நாளை புதன் கிழமை கொழும்பில் மின் சக்தி எரி சக்தி அமைச்சருடன் விசேட கலந்துறையாடல் ஒன்று இடம் பெறவுள்ளது.இதன் போது தொடர்ச்சியாக ஏற்படும் மின் தடை தொடர்பிலும்,அதனை நிவர்த்தி செய்வது குறித்தும் ஆராயப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னாரில் தொடர் மின்தடை குறித்து அவசர கலந்துரையாடல். Reviewed by NEWMANNAR on September 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.