ரோஹிங்கிய முஸ்ஸீம் மக்களுக்கு சம்பவங்களை கண்டித்து மன்னாரில் போராட்டம்-(படம்)
மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்ஸீம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மனித குலத்திற்கு எதிராக மியன்மார் அரச பயங்கரவாதத்தின் இனச்சுத்திகரிப்பு செயற்பாட்டை கண்டித்து மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை(5) காலை மன்னாரில் சனநாயாக போராட்டம் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இன்று செவ்வாய்க்கிழமை(5) காலை 10.30 மணியளவில் இடம் பெற்றது.
மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்ஸீம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாவிமானமற்ற மிருகத்தனமான செயற்பாட்டை வண்மையாக கண்டித்தும்,இனச்சுத்திகரிப்பு செயற்பாட்டை கண்டித்தும், அந்த மக்களின் வாழ்வுரிமையினை பாதுகாக்கும் வகையிலும், சர்வதேசத்திற்கு அலுத்தத்தினை கொடுக்கும் வகையில் குறித்த போராட்டம் இடம் பெற்றது.
குறித்த போராட்டத்தில் மன்னார் மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார்,வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக், ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ்,மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் என்.நகுசீன், மன்னார் பிரதேசச் சபையின் முன்னாள் தலைவர் மாட்டீன் டயஸ்,மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பி.ஏ.அந்தோனி மார்கள் ,பெண்கள் அமைப்பின் பிரதி நிதிகள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உற்பட சுமார் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்ஸீம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மனித குலத்திற்கு எதிரான செயற்பாடுகளை கண்டிக்கும் வகையிலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கும், மனித உரிமைகள் அமைப்புகளுக்கும் அலுத்தத்தை கொடுக்கும் வகையிலும் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இன்று செவ்வாய்க்கிழமை(5) காலை 10.30 மணியளவில் இடம் பெற்றது.
மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்ஸீம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாவிமானமற்ற மிருகத்தனமான செயற்பாட்டை வண்மையாக கண்டித்தும்,இனச்சுத்திகரிப்பு செயற்பாட்டை கண்டித்தும், அந்த மக்களின் வாழ்வுரிமையினை பாதுகாக்கும் வகையிலும், சர்வதேசத்திற்கு அலுத்தத்தினை கொடுக்கும் வகையில் குறித்த போராட்டம் இடம் பெற்றது.
குறித்த போராட்டத்தில் மன்னார் மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார்,வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக், ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ்,மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் என்.நகுசீன், மன்னார் பிரதேசச் சபையின் முன்னாள் தலைவர் மாட்டீன் டயஸ்,மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பி.ஏ.அந்தோனி மார்கள் ,பெண்கள் அமைப்பின் பிரதி நிதிகள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உற்பட சுமார் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்ஸீம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மனித குலத்திற்கு எதிரான செயற்பாடுகளை கண்டிக்கும் வகையிலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கும், மனித உரிமைகள் அமைப்புகளுக்கும் அலுத்தத்தை கொடுக்கும் வகையிலும் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
ரோஹிங்கிய முஸ்ஸீம் மக்களுக்கு சம்பவங்களை கண்டித்து மன்னாரில் போராட்டம்-(படம்)
Reviewed by NEWMANNAR
on
September 05, 2017
Rating:
No comments:
Post a Comment