அண்மைய செய்திகள்

recent
-

களிமோட்டை கிராமத்தில் கணினிப்பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 45 பேரூக்கு சான்றிதல்கள் வழங்கி வைப்பு-(படம்)



நண்பனின் தேவை நற்பணி மன்றத்தினால் கடந்த இரண்டு மாதங்கள் களிமோட்டை புளியங்குளம் கிராமத்தில் இடம் பெற்று வந்த இலவச கணினிப்பயிற்சி நெறியை பூர்த்தி செய்த மாணவ,மாணவிகளுக்கு சான்றிதல் வழங்கும் நிகழ்வு நேற்று(27) வெள்ளிக்கிழமை மாலை களிமோட்டை ஆலயத்தில், நண்பனின் தேவை நற்பணி மன்றத்தின் இயக்குனர் பவமொழி பவன் தலைமையில் இடம் பெற்றது.

தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்தில் பின் தங்கிய கிராமங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் இலவச கணினிப்பயிற்சி நெறியின்  17ஆவது பயிற்சி நெறி களிமோட்டை புளியங்குளம் கிராமத்தில் கடந்த 8 ஆம் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

-சுமார் 45 மாணவ மாணவிகள் இணைத்துக்கொள்ளப்பட்டு இடம் பெற்று வந்த கணினிப் பயிற்சி நெறியின் சான்றுதல் வழங்கும் நிகழ்வு நேற்று(27) வெள்ளிக்கிமை மாலை 5 மணியளவில் களிமோட்டை ஆலயத்தில் இடம் பெற்றது.

-குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் கலந்துகொண்டு சான்றுதல்களை வழங்கி வைத்தார்.

-இதன் போது அருட்தந்தையர்கள்,அருட்சகோதரி கள்,கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.















களிமோட்டை கிராமத்தில் கணினிப்பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 45 பேரூக்கு சான்றிதல்கள் வழங்கி வைப்பு-(படம்) Reviewed by Author on October 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.