அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு-

இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் நேற்று(17) திங்கட்கிழமை இவு 9.30 மணியளவில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரினால் கைது செய்யப்பட்ட தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்களையும் எதிர்வரும் 25 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா இன்று உத்தரவிட்டார்.

இராமேஸ்வரத்தில் இருந்து தங்கச்சி மடம் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள் படகு ஒன்றில் நேற்று திங்கட்கிழமை(16) மாலை 5.30 மணியளவில் இராமேஸ்;வரத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது நேற்று திங்கட்கிழமை(16) இரவு 9.30 மணியளவில் தலைமன்னார் கடற்பரப்பில் வைக்கு கடற்படையினரினால் கைது செய்யப்பட்டு தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தலைமன்னார் கடற்கடையினர் விசாரனைகளின் பின்னர் குறித்த 8 மீனவர்களையும் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் குறித்த மீனவர்களை இன்று மதியம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா குறித்த மீனவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு- Reviewed by NEWMANNAR on October 17, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.