மன்-தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த ஒளி விழா....
மன்-தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த ஒளி விழா நிகழ்வானது பாடசாலை அதிபர் A.N.ஜோகராஜா தலைமையில் மதியம் 1.30 மணிக்கு ஆரம்பம் ஆனது
மேற்படி நிகழ்வில் மன்னார் வலயக்கல்வி பணிமனையின் முன்னாள் தமிழ் உதவி கல்வி பணிப்பாளர் P.P.M.V.லெம்பேட் அவர்களுக்கு பிரியாவிடை நிகழ்வும் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் தோட்டவெளி பங்கு தந்தை செபமாலை மற்றும் ஜோசேவாஸ் நகர் பங்கு தந்தை ஜுட் குரூஸ் அவர்களும் மடு தியான இல்ல இயக்குனர் அருட்தந்தை இராயப்பு அவர்களும்
சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்
இவ் நிகழ்வில் ஜேசுவின் பிறப்பை நினைவு கூறும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றது. இவ் நிகழ்வின் முக்கிய அம்சமாக 34 வருடங்கள் ஆசிரியர் பணி ஆற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ள முன்னாள் தோட்டவெளி பாடசாலையின் பணிப்பாளருமான முன்னாள் தமிழ் உதவி கல்வி பணிப்பாளர் P.P.M.V.லெம்பேட்அவர்களுக்கு பிரிவு உபசார நிகழ்வும் இடம் பெற்றது.
மன்-தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த ஒளி விழா....
Reviewed by Author
on
November 20, 2017
Rating:
No comments:
Post a Comment