அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவபுரம் கிராமத்தில் மர நடுகை திட்டம் ஆரம்பித்து வைப்பு-(படம்)


வடமாகாண விவசாய அமைச்சினால் நடை முறைப்படுத்தப்படும் மர நடுகை திட்டம் இன்று புதன் கிழமை(1) காலை மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவபுரம் கிராமத்தில் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தலைமையில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

-வடக்கு விவசாய அமைச்சின் ஊடாக கார்த்திகை மாதம் வடக்க மாகாண மர நடுகை மாதம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.அதற்கு அமைவாக இன்று புதன் கிழமை 1 ஆம் திகதி குறித்த மர நடுகை மாதம் மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவபுரம் கிராமத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

-வடமாகாணத்தில் உள்ள 25 பிரதேசச் செயலாளர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ஒவ்வெரு பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் ஒரு கிராமம் தெரிவு தெரிவு செய்யப்பட்டு குறித்த மர நடுகை திட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது.

வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் விவசாய அமைச்சின் பிரதி நிதிகள்,விவசாய திணைக்கள அதிகாரிகள் , கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தகக்து.












மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவபுரம் கிராமத்தில் மர நடுகை திட்டம் ஆரம்பித்து வைப்பு-(படம்) Reviewed by NEWMANNAR on November 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.